Princiya Dixci / 2022 ஓகஸ்ட் 07 , மு.ப. 10:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒலுமுதீன் கியாஸ்
கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நடுவூற்று பகுதியில் ஹெரோய்ன் போதைப்பொருள் வைத்திருந்த குடும்பஸ்தர் ஒருவர், திருகோணமலை பிராந்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவால் நேற்று (06) மாலை கைது செய்யப்பட்டு, பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
கைதான நபர்களிடம் இருந்து 3.73 கிராம் நிறையுடைய ஹெரோய்ன் பொதி கைப்பற்றப்பட்டதாக போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் தெரிவித்தனர்.
குறிஞ்சாக்கேணி, நடுவூற்று பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தரே கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் தொடர்பாக மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.
24 minute ago
44 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
44 minute ago
49 minute ago