2025 செப்டெம்பர் 15, திங்கட்கிழமை

ஆஸி. செல்ல முயற்ற 90 பேருக்கும் விளக்கமறியல்

Menaka Mookandi   / 2012 நவம்பர் 26 , பி.ப. 01:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென் கடற்கரைப் பிரதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக படகு மூலம் அவுஸ்திரேலியா செல்ல முயற்சித்தபோது கைதுசெய்யப்பட்ட 90 பேரையும் டிசம்பர் மாதம் 03ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

காலி நீதவான் நீதிமன்றத்தில்இன்று ஆஜர்படுத்திய போதே அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு காலி மேலதிக நீதவான் குணேந்திர குமார உத்தரவிட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் சிறுவர்கள் அறுவரும் 8 பெண்களும் அடங்குகின்றனர். விளக்கமறியளில் வைக்கும் போது குழந்தைகளை பெற்றோர்களிடமிருந்து பிரிக்கவேண்டாம் என்று நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .