2025 ஓகஸ்ட் 06, புதன்கிழமை

‘எவருக்கும் அஞ்சமாட்டேன்’

Kogilavani   / 2017 மார்ச் 26 , மு.ப. 10:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

“எனக்கு முதுகெலும்பு இருக்கின்ற காரணத்தால் நான், எவருக்கும் அஞ்சப்போவதில்லை. அதற்கு அவசியமும் இல்லை” என, நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க தெரிவித்தார்.

காலி நகரில் இடம்பெற்ற கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

“அன்று, மஹிந்த ராஜபக்‌ஷவின் படத்தை பிடித்துக் கொண்டு அதற்கு கீழே 'நாம் உயிரே போனாலும் உங்களுடன் இருப்போம்' எனக் கூறிக்கொண்டு வாக்குகளை கேட்டுக் கொண்டு வந்தவர்கள், இன்று மாயமாகிவிட்டார்கள்.

"எனது ஆதரவு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கே, அந்தவகையில், மஹிந்தவின் வெற்றியை, இங்கு கூடிய மக்கள் தொகை நிரூபித்துவிட்டது" என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X