Sudharshini / 2016 மார்ச் 07 , மு.ப. 07:02 - 0 - {{hitsCtrl.values.hits}}

மு. இராமசந்திரன்
காலி, வல்பிட்டித்தோட்டம் மற்றும் சிட்ரஸ் தோட்ட மக்களுக்கான வீடுகள் கையளிக்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (06) நடைபெற்றது.
மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சின் நிதியொதுக்கீட்டின் கீழ் வல்பிட்டி தோட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 25 வீடுகளும் சிட்ரஸ் தோட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 20 வீடுகளும் பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டன.
இந்நிகழ்வில், ஊடகம் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஜயந்த கருணாதிலக, காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல பண்டாரி கொடகே, நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ், மாகாணசபை உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


13 minute ago
32 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
32 minute ago
48 minute ago