Kogilavani / 2010 நவம்பர் 02 , மு.ப. 07:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஏ.மன்சூர்)
மாத்தறை மாவட்டத்திலுள்ள மாவரனைப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தியல்ல என்ற இடத்தில் நேற்று முன்தினம் 31 ஆம் திகதி காலை ஓட்டாவில் சென்று கொண்டிருந்த இரு ஆசிரியைகள் மீது மரமொன்று வீழ்ந்ததில் ஒருவர் ஸ்தலத்திலேயே பலியானதுடன் மற்றுமொரு ஆசிரியரும் ஓட்டோ சாரதியும் பலத்த காய்ங்களுக்குட்பட்ட நிலையில் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உயிரழந்த ஆசிரியரின் 18 மாத குழந்தை எந்தவித ஆபத்துக்களுமின்றி உயிர்தப்பியுள்ளது.
இவ்விரு ஆசிரியர்களும் பாலர் பாடசாலையொன்றில் கடமையாற்றிக் கொண்டிருந்தவர்களாவர். இச்சம்பவத்தில் எச்.எல்.ரங்கிகா (வயது 29) என்பவரே உயிரழந்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .