2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

நாகொடயில் அதிக மழைவீழ்ச்சி

Kogilavani   / 2017 செப்டெம்பர் 01 , மு.ப. 10:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

காலி மாவட்டம், நாகொட பிரதேசத்தில் இன்று அதிகாலை 1 மணிமுதல் 7 மணிவரை 90 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ   நிலையத்தின் மாவட்டப் பணிப்பாளர் கலாநிதி தயா ரத்நாயக்க தெரிவித்தார்.

காலி மாவட்டத்தில்,  இன்று அதிகாலை 1 மணிமுதல் 5 மணிவரை கடும் மழைபெயதுள்ளதாகவும், எனினும் நாகொட பிரதேசத்திலேயே, 90 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை,  கடும் காற்றுக் காரணமாக, காலி-மாத்தறை வீதி, சமுத்ர மாவத்தையில் மரமொன்று முறிந்து விழுந்ததில், போக்வரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும், காலி கூட்டுறவு வைத்தியசாலைக்கு முன்பாக கூரையொன்று சரிந்து விழுந்ததில் மோட்டார் சைக்கிளொன்று சேதமாகியுள்ளதாகவும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .