2025 மே 13, செவ்வாய்க்கிழமை

23 மாவட்டங்களில் மீண்டும் ஊரடங்கு அமலானது

Editorial   / 2020 மே 11 , பி.ப. 08:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் 23 மாவட்டங்களில் இன்று (11) இரவு 8 மணி முதல் நாளை (12) அதிகாலை 5 மணி வரை மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

கொழும்பு மற்றும் கம்பஹா தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் இன்று அதிகாலை 5 மணிக்கு ஊரடங்கு தளர்த்தப்பட்டது.

இந்த மாவட்டங்களில் இன்று முதல் மறு அறிவித்தல் வரை தினமும் இரவு 8 மணி தொடக்கம் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு மீள அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் அமலிலுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X