2024 மே 04, சனிக்கிழமை

இன்று மின்வெட்டு அமுல்படுத்தப்படும் விபரம்

Freelancer   / 2022 பெப்ரவரி 28 , மு.ப. 07:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

மின் உற்பத்திக்கு தேவையான எரிபொருள் பற்றாக்குறை காரணமாக இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இன்று ஐந்து மணித்தியாலங்களுக்கு அதிகமான சுழற்சி முறையிலான மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு இலங்கை மின்சார சபை விடுத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அங்கீகாரம் வழங்கியுள்ளது.

மின் உற்பத்திக்கு தேவையான எரிபொருள் பற்றாக்குறை காரணமாக இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, இன்று A,B,C பகுதிகளில் 4 மணி நேரம் 40 நிமிடங்களுக்கு மின் வெட்டு அமுல் படுத்தப்பட உள்ளது.

காலை 8.30 முதல் 2 மணி நேரம் 40 நிமிடங்களும் மற்றும் மாலை 4.30 மணி முதல் இரவு 10.30 மணி வரையான காலப்பகுதியில் 2 மணி நேர மின்வெட்டும் அமுல்படுத்தப்பட உள்ளது.
இதுவேளை P,Q,R,S,T,U,V,W ஆகிய பகுதிகளுக்கு 5 மணி நேரம் 15 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளது.

குறித்த பகுதிகளில் காலை 8.30 முதல் 2 மணி நேரம் 45 நிமிடங்களும் மற்றும் மாலை 4.45 முதல் இரவு 9.45 வரை 2 மணி நேரமும் இவ்வாறு மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. (J)

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .