2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

இன்று வெளிவந்த புதிய செய்தி

Freelancer   / 2022 ஜனவரி 15 , மு.ப. 10:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்று(15) மின் துண்டிப்பு இடம்பெறாது என மின்சக்தி அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கனியவள கூட்டுத்தாபனத்திடமிருந்து மின்சார சபைக்கு 3,000 மெற்றிக் டன் டீசல் கிடைத்துள்ளமையால் மின் துண்டிப்பு இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் காலங்களில் நாட்டில் 24 மணிநேர மின்வெட்டு ஏற்படக் கூடும் என்று இலங்கை மின்சார சபை ஊழியர் சங்கம் நேற்று எச்சரிக்கை விடுத்திருந்தது.

எதிர்வரும் நாட்களில் மின் தட்டுப்பாடு காரணமாக நாட்டின் செயற்பாடுகள் ஸ்தம்பிக்கக் கூடும் என்று, சங்கத்தின் பொதுச் செயலாளர் ரஞ்சன் ஜெயலால் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .