2025 மே 13, செவ்வாய்க்கிழமை

இலங்கையில் கொரோனா தொற்றாளர்கள் 416 ஆக அதிகரிப்பு

Editorial   / 2020 ஏப்ரல் 24 , பி.ப. 06:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 416 ஆக  அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இவர்களில் வெலிசர கடற்படை முகாமை சேர்ந்த கடற்படை வீரர்கள் 30 பேர் உள்ளடங்குகின்றனர் என, இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். 

முன்னதாக குறித்த முகாமை சேர்ந்த 30 பேர் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டிருந்தனர். 

இந்நிலையில் இதுவரை குறித்த முகாமில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான 60 பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை, இன்றைய தினம் இதுவரை 48 கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X