2025 மே 15, வியாழக்கிழமை

களு, களனி கங்கைகளின் நீர்மட்டம் அதிகரிப்பு; 7 மாவட்டங்களில் மண்சரிவு அபாயம்

Editorial   / 2019 ஜூலை 19 , மு.ப. 10:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

களுகங்கை மற்றும் களனி கங்கை ஆகியவற்றின் நீர்மட்டம், தொடர்ந்தும் அதிகரித்து வருவதாகவும் இதனால், வௌ்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதால், பொதுமக்கள் அவதானமாக இருக்க வேண்டுமென, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை, நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, இரத்தினபுரி, நுவரெலியா, கண்டி, கேகாலை, களுத்துறை, மாத்தறை, காலி போன்ற மாவட்டங்களுக்கு, மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .