J.A. George / 2021 ஏப்ரல் 16 , மு.ப. 09:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் மேலும் நான்கு கொரோனா வைரஸ் தொற்று மரணங்கள் நேற்று பதிவாகிய நிலையில், இதுவரை பதிவான கொரோனா வைரஸ் தொற்று மரணங்களின் எண்ணிக்கை 608 ஆக அதிகரித்துள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன், அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பன்னிபிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த 62 வயதுடைய ஆண், எல்லக்கல பகுதியைச் சேர்ந்த 72 வயதுடைய பெண், கபுலியத்த பிரதேசத்தைச் சேர்ந்த 78 வயதுடைய ஆண், தெனியாய பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய ஆண் ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .