2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

சட்டமா அதிபரின் மீளாய்வு மனு நிராகரிப்பு

Editorial   / 2019 ஓகஸ்ட் 01 , பி.ப. 06:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

கட்டாய விடுமுறையில் உள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மீளாய்வு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

குறித்த இருவரையும் பிணையில் விடுவித்தமைக்கு எதிராக சட்டமா அதிபரால் இந்த மீளாய்வு மனு இன்றைய தினம் நிராகரிக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான தகவல்கள் முன்னதாக கிடைத்தும் அதனை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டில் அவர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

எனினும் அவர்கள் இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டமையை மீளாய்வுக்கு உட்படுத்த வேண்டும் என, சட்டமா அதிபரால் இந்த மீளாய்வு மனு தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X