2025 மே 07, புதன்கிழமை

“தனிமைக்கு” சென்ற பஸ் விபத்து

Editorial   / 2020 நவம்பர் 11 , பி.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டுக்குத் திரும்பிய சில​ரை, தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்துக்கு அழைத்து சென்றுக்கொண்டிருந்த பஸ்ஸொன்று விபத்துக்குள்ளாகியது.

அதில், காயமடைந்த சிலர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக, நாடு திரும்பிய சிலரை, அதி​வேக நெடுஞ்சாலையின் ஊடாக அழைத்துச் சென்று கொண்டிருந்த அதிசொகுசு பஸ்ஸொன்றே, இவ்வாறு நேற்றிரவு விபத்துக்குள்ளாகியுள்ளது.

அந்த பஸ்ஸின் முன்சில்லு திடீரென வெடித்தமையால் அப்பஸ்,  பாதுகாப்பு வேலியில் மோதியதால் இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளதென ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவருகின்றது.

கட்டுநாயக்க-கொழும்பு அதி​வேக நெடுஞ்சாலையில், 25ஆவது கிலோமீற்றரில் இவ்விபத்துக்கு இடம்பெற்றுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X