Editorial / 2018 செப்டெம்பர் 25 , பி.ப. 03:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்ஷன், எம்.றொசாந்த்
தியாக தீபம் திலீபனின் நினைவு தின நிகழ்வுகளை நடத்துவதற்கு தடை செய்யக்கோரி, பொலிஸாரால் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது.
தியாக தீபம் திலீபனின் நினைவு தின நிகழ்வுகளை நடத்துவதற்கு தடை செய்யக்கோரி, பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பம் மீதான விசாரணை, யாழ்.நீதவான் நீதிமன்றத்தில் இன்று பிற்பகல் 2 மணியளவில் நடைபெற்றது.
இதன்போது, பொலிஸாரால் குறிப்பிடப்பட்டு தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்ள முடியாதெனத் தெரிவித்த நீதவான் எஸ்.சதீஸ்தரன், அந்த விண்ணப்பத்தை நிராகரித்து உத்தரவிட்டார்.
இதற்கமைய, நாளை யாழ். மாநாகர சபையால் ஒழுங்கு செய்யப்பட்டதன் பிரகாரம், தியாக தீபம் திலீபனின் நினைவு தின நிகழ்வுகள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
6 minute ago
39 minute ago
49 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
39 minute ago
49 minute ago
1 hours ago