Editorial / 2022 பெப்ரவரி 10 , மு.ப. 10:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
ராஜபக்ஷர்கள், தேர்தலுக்கு எப்போதுமே பயந்தவர்கள் இல்லை, ஆகையால் நீங்களும் தயாராகுங்கள் என எதிர்க்கட்சியினருக்கு அறிவுரை கூறிய ஆளும் தரப்பு, எப்போது தேர்தல் வேண்டும் எனக் கேட்டது.
பாராளுமன்றத்தில் இன்று (10) நடைபெற்ற வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தில் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஹோரண பண்டார எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே, ஆளும் கட்சியின் பிரதம கொறடாவான அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ புள்ளே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நாங்கள் தேர்தலுக்கு பயந்தவர்கள் அல்லர், ராஜபக்ஷர்களும் பயப்பிடமாட்டார்கள், தேர்தல் எப்போது வேண்டும். தேர்தல் நடக்கவேண்டிய நேரத்தில் தேர்தல் நடக்கும் எனத் தெரிவித்த ஜோன்ஸ்டன், அதில் மொட்டு விஷேட வெற்றியை பெறும் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .