2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

பென்டோரா பேப்பர்ஸ்: ஜனாதிபதி அதிரடி உத்தரவு

Editorial   / 2021 ஒக்டோபர் 06 , மு.ப. 10:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

பென்டோரா பேப்பர்ஸ் குறித்து உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவுக்கு  உத்தரவிட்டுள்ளார்.

இன்று (06) காலை இந்த உத்தரவை  ஜனாதிபதி பிறப்பித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர், அமைச்சர் டளஸ் அழகபெரும தெரிவித்தார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் தற்போது இடம்பெற்றுக்கொண்டிருக்கும் வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் டளஸ் அழகபெரும மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்த விசாரணைகளை ஒரு மாத காலத்திற்குள் நிறைவு செய்து, விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார் என்றும் அமைச்சர் கூறினார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X