2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கிச் சூடு; நால்வர் மரணம்

Freelancer   / 2021 டிசெம்பர் 25 , மு.ப. 08:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான்

அம்பாறை திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில்  நான்கு  பொலிஸார் உயிரிழந்துள்ளனர் எனத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று (24) இரவு நடைபெற்ற இத்துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட பலர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும்  இத்துப்பாக்கிச் சூட்டினை  நடத்திய பொலிஸ் உத்தியோகத்தர்  சரணடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது குறித்த மேலதிக விசாரணைகளைப்   பொலிஸார்  மேற்கொண்டு வருவதாகத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .