2024 மே 04, சனிக்கிழமை

மற்றுமோர் இராஜாங்க அமைச்சர் இராஜினாமா?

Freelancer   / 2022 பெப்ரவரி 15 , பி.ப. 09:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிராமிய வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர்  நிமல் லான்சா தனது தனிப்பட்ட ஊழியர்களை அமைச்சு அலுவலகத்தை விட்டு வெளியேறுமாறு பணிப்புரை விடுத்துள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அமைச்சின் செயலாளருடனான பிரச்சினை காரணமாக தனியார் ஊழியர்களை நீக்குவதற்கு இராஜாங்க அமைச்சர் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

இந்த நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காக இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா  நாளை (16) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று (15) ஜனாதிபதியை சந்திக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத் நிமல் லான்சாவுக்கு தொலைபேசியில் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .