2025 மே 15, வியாழக்கிழமை

விபத்தில் மூவர் பலி

Editorial   / 2019 ஜூலை 29 , மு.ப. 09:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

அநுராதபுரம்- மதவாச்சி வீதியின் வஹமலுகொல்லேவ பிரதேசத்தில்  இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், ஐவர் காயமடைந்துள்ளனர்.

குறித்த வீதியில் யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தனியார் சொகுசு பஸ்ஸொன்றும் தம்புள்ளை நோக்கி பயணித்த லொறியொன்றும் நேருக்கு நேர் மோதியதால், இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்த மூவரும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 53, 30, 12 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்விபத்தில் காயமடைந்தவர்கள் மேலதிக சிகிச்சைக்காக, அநுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனரென்றும்,  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .