2025 ஜூன் 01, ஞாயிற்றுக்கிழமை

5 ஏக்கர் மானாபுல் காடு தீக்கிரை...

Kogilavani   / 2016 பெப்ரவரி 28 , மு.ப. 04:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

கு.புஸ்பராஜ்

அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டொரிங்டன் தோட்ட பகுதியில்,  5 ஏக்கர் மானாபுல் காடு, நேற்று மாலை தீக்கிரையாகியுள்ளதாக அக்கரப்பத்தனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ர.அ.ஆனந்தசிறி தெரிவித்தார்.

பொலிஸாரும் பொதுமக்களும் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக அவர் கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,

“அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவில், காடுகளுக்கு தீ வைக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இதனால், பயன்தரு மரங்கள் அழிக்கப்படுவதுடன் காட்டு விலங்குகள் உயிரிழக்கும் பரிதாபம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறான சம்பவங்களில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக, நடவடிக்கை எடுக்கவுள்ளோம்” என்றார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X