2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

30 கட்டில்கள் அன்பளிப்பு

Freelancer   / 2021 ஜூன் 18 , பி.ப. 07:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பில் கொவிட் 19 வைரஸ்  தடுப்பு  நிலையத்தின் பயன்பாட்டுக்கு, சுமார் பத்து இலட்சம் ரூபா பெறுமதியான 30 கட்டில்களை மட்டக்களப்பிலுள்ள ஆஞ்சநேயர் தனியார் வர்த்தக நிலையம் வழங்கியுள்ளது.

இதற்கமைய குறித்த கொரானா வைரஸ் தடுப்பு சிகிச்சை நிலையத்துக்கான கட்டில்களை உத்தியோக பூர்வமாக அன்பளிப்புச் செய்யும் நிகழ்வு மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலக வளவில் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் தலைமையில் இன்று(18) நடைபெற்றது.

இந்நிகழ்வின் போது, ஆஞ்சநேயர் தனியார் வர்த்தக நிறுவன முகாமைத்துவ பணிப்பாளர், சண்முகராஜா நிரோஷன் இந்த அன்பளிப்பினை இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் முன்னிலையில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாகலிங்கம் மயூரனிடம் உத்தியோக பூர்வமாக கையளித்தார்.

M


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .