2026 மே 01, வெள்ளிக்கிழமை

33 ஆவது நினைவு தினம்

Editorial   / 2026 மே 01 , பி.ப. 12:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


 
முன்னாள் ஜனாதிபதி மறைந்த ரணசிங்க பிரேமதாசவின் 33 ஆவது சிரார்த்த தின நிகழ்வு இன்று (01) காலை உணர்வுபூர்வமாக நடைபெற்றது. கொழும்பு, புதுக்கடை உயர் நீதிமன்றத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள அன்னாரது திருவுருவச் சிலை வளாகத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அவரது தாயார் ஹேமா பிரேமதாச உள்ளிட்ட ரணசிங்க பிரேமதாசவின் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் எனப் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இதன்போது, மறைந்த ஜனாதிபதியின் உருவச்சிலைக்கு மலரஞ்சலிகள் செலுத்தப்பட்டதுடன், அன்னாரது சேவைகளை நினைவுகூர்ந்து கௌரவிப்பும் செய்யப்பட்டது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .