Freelancer / 2021 ஜூலை 03 , பி.ப. 02:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹஸ்பர் ஏ ஹலீம்
வெருகல் பூநகர் பிரதேசத்தில் செளபாக்கியா உற்பத்தி கிராம வேலைத்திட்டத்தின் கீழ் கோழிவளர்ப்பை ஆரம்பிப்பதற்கான அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று (02) வெருகல் பிரதேச செயலாளர் கே.குணனாதன் தலைமையில் நடைபெற்றது.
கோழி வளர்ப்பிற்காக தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு குறித்த வேலைத்திட்டத்தை ஆரம்பிப்பதற்கான அனுமதி கடிதத்தை திருமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கபில நுவன் அத்துக்கோரளவுடன் இணைந்து திருமலை மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோரளாவும் வழங்கி வைத்தனர்.
மேலும்15,000 கோழிக் குஞ்சுகள் பயனாளிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளன. இதற்காக 82 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
M







12 minute ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
3 hours ago
3 hours ago