2025 மே 17, சனிக்கிழமை

ஏழு நாள்கள் சவால்..!

Editorial   / 2020 ஏப்ரல் 16 , பி.ப. 08:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

குடும்பத்துடன் நாள்களைக் களிக்கும் ஏழு நாள்கள் சவாலின் மூன்றாவது நாளான இன்று, தன் தந்தையுடன் (பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ) மகிழ்வாகப் பொழுதைக் கழித்ததாக, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ, தன்னுடைய பேஸ்புக்கில் பதிவொன்றை இட்டுள்ளார்.

“ஒவ்வொரு நாளும் என் தந்தையுடன் கவலையற்ற நேரத்தைப் பகிர்ந்து கொள்ளும் பொன்னான சந்தர்ப்பம் எனக்கு இல்லை. ஆனால், வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம், அந்த தருணங்கள் ஆழமாக பொக்கிஷமாக இருக்கின்றன. இன்று இதுபோன்ற ஒரு நாள், நாங்கள் இருவரும் வழக்கமாக பரபரப்பான கால அட்டவணையிலும், ஓய்வு நேரத்தை மகிழ்வாகக் களிக்க சிறிது நேரம் ஒதுக்கியிருந்தோம். சமூக இடைவௌியைப் பேணி, பொன்னான சந்தர்ப்பந்தைப் பேணிய தருணமிது” என, நாமல் ராஜபக்‌ஷ அக்குறிப்பில் மேலும் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .