2025 ஜூன் 01, ஞாயிற்றுக்கிழமை

களைகட்டிய கச்சதீவு திருவிழா...

Princiya Dixci   / 2016 பெப்ரவரி 21 , பி.ப. 01:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா, இம்முறையும் இலங்கை மற்றும் இந்தியாவைச் சேர்ந்த பக்தர்களின் வெள்ளத்தினால் களைகட்டியது.

கொடியேற்றம் மற்றும் நற்கருணை வழிபாட்டுடன் நேற்று சனிக்கிழமை (20) மாலை ஆரம்பமான திருவிழா திருப்பலியைத் தொடர்ந்து இரவு திருச்சொரூப பவனி இடம்பெற்றது.

இரவு முழுவதும் கண்விழித்து வழிபாடுகளில் ஈடுபட்ட பக்தர்கள், இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணியவில் யாழ். மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசம் ஆண்டகையால் ஒப்புகொடுக்கப்பட்ட திருவிழா திருப்பலி ஒப்புக்கொடுத்தலில் பக்தியுடன் கலந்துகொண்டனர்.

இலங்கை மற்றும் இந்தியாவிலிருந்தும் வருகைதந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், புனித அந்தோனியார் ஆலயத் திருவிழாவில் பக்தி பரவசத்துடன் பங்கேற்று அந்தோனியாரின் ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொண்டனர். (படங்கள்: ஜே.ஏ. ஜோர்ஜ், வே. தபேந்திரன்)


You May Also Like

  Comments - 0

  • micheal Friday, 26 February 2016 05:22 AM

    St, Antonys pray for us

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X