Princiya Dixci / 2021 ஒக்டோபர் 28 , பி.ப. 12:04 - 0 - {{hitsCtrl.values.hits}}

காஷ்மீர் கருப்பு தினத்தை முன்னிட்டு, ஐக்கிய நாடுகள் சபையின் கொழும்புக் காரியாலயத்துக்கு முன்னால் பதாதைகளை ஏந்திக்கொண்டு, முஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பினர், நேற்று (27) போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இடம்பெறும் அட்டூழியங்களையும், அப்பாவி காஷ்மீரிகளை மனிதாபிமான மற்ற முறையில் ஆக்கிரமிப்புப் படைகள் நடத்துவதையும் இவர்கள் தமது பதாதைகளில் சுட்டிக்காட்டியிருந்தனர்.
ஐக்கிய நாடுகள் சபையும் ஐ.நா. மனித உரிமை அமைப்பும் இவ்விடயத்தில் தலையிட்டு, இரு நாடுகளுக்கிடையிலான முரண்பாடுகளைத் தீர்த்து வைக்க வேண்டுமென போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இதன்போது வலியுறுத்தினர்.
(படங்கள் - நூருல் ஹுதா உமர்



அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .