Editorial / 2023 பெப்ரவரி 07 , பி.ப. 01:25 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கான ஐக்கிய அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங், நுவரெலியா சீத்தாஎலிய சீதையம்மன் ஆலயத்தில் இன்று (07) நடைபெற்ற விசேட பூஜை நிகல்வில் கலந்து கொண்டார்.
இவரை நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் நுவரெலியா ஆவெலியா ஸ்ரீ முத்துமாரியம்மன் சீத்தாஎலிய சீதையம்மன் ஆலய அறங்காவலர் சபையின் தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் உட்பட ஆலய நிர்வாகத்தினர் மாலை அணிவித்து வரவேற்றனர். விசேட பூஜைகளிலும் அவர் கலந்துகொண்டார்.
தூதுவருக்கு ஆலயத்தின் சார்பாக பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன் நினைவுச்சின்னமும் வழங்கி வைக்கப்பட்டது. (எஸ். கே. குமார்)






25 minute ago
34 minute ago
40 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
34 minute ago
40 minute ago
51 minute ago