2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ஜூலை படுகொலை…

Editorial   / 2021 ஜூலை 23 , பி.ப. 12:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜூலை படுகொலையின் 38 ஆவது ஆண்டு நாளான, இன்று 23ஆம் திகதி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் கல்முனை நகரில்   ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

  த.தே.ம.முவின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் துஷானந் , கட்சியின் உறுப்பினர்கள், பொதுமக்கள் பதாதைகளை தாங்கியவாறு பங்குபற்றியிருந்தனர்.

“தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் தமிழ் மக்கள் மீதான அடக்குமுறைகள் ,படுகொலைகளுக்கு சர்வதேசம் நீதியைப் பெற்றுத்தர வேண்டும்” என்று பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் இதன்போது கருத்துரைத்தார்.(படங்களும் தகவலும் பாறுக் ஷிஹான் வி.ரி.சகாதேவராஜா)

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X