2025 மே 31, சனிக்கிழமை

தீ...

Princiya Dixci   / 2016 மார்ச் 25 , மு.ப. 08:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

திம்புள்ள, பத்தனைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குடாகம கொமர்ஷல் பகுதியிலுள்ள 50 ஏக்கர் காடு, இன்று வெள்ளிக்கிழமை (25) 11 மணியளவில் திடீரெனத்  தீப்பற்றியதில் சுமார் 20 ஏக்கர் காடு தீயில் எரிந்துசாம்பலாகியுள்ளது. 
 
தீயைக் கட்டுப்படுத்த திம்புள்ள, பத்தனைப் பொலிஸார் முயற்சித்தபோதும் காற்றின் வேகம் காரணமாக தீ அதிகளவில் பரவியதால் தீயைக் கட்டுப்படுத்த முடியவில்லை. 

கொட்டகலை பெற்றோலியக் கூட்டுத்தாபன தீயணைப்பு பிரிவினரும் பத்தனைப் பொலிஸார் மற்றும் ஹட்டன் டிக்கோயா நகர சபை தீயணைப்புப் பிரிவு ஆகியோர் இணைந்து தீயைக் கட்டுப்படுத்த பிற்பகல் 2 மணிவரை முயற்சித்தனர். 

ஆனால், சில பகுதிகளில் மட்டுமே அவர்களால் கட்டுப்படுத்த முடிந்தது. (படப்பிடிப்பு: ஆ.ரமேஷ்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .