2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

தமக்கான வீட்டு உரிமையை கேட்டு ​போராட்டம்

Freelancer   / 2023 நவம்பர் 20 , பி.ப. 02:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

இராகலை மத்திய பிரிவு தோட்ட தொழிலாளர்கள் தமக்கான வீட்டு உரிமையை கேட்டு இராகலை நகரில் வீதிக்கு போராட்டமொன்றினை இன்று (20) முன்னெடுத்திருந்தனர்.

இராகலை மத்திய பிரிவு தோட்டத்தில் கடந்த (05.07.2023) அன்று 20 வீடுகளைக் கொண்ட தொடர் குடியிறுப்பு திடீர் தீ விபத்துக்கு உள்ளாகி முற்றாக எறிந்து சேதமடைந்தது.

இந்தநி​லையில்,  தீ விபத்தில் 18 வீடுகள் முற்றாக எறிந்ததுடன் 18 குடும்பங்களை சேர்ந்த 75 பேர் நிர்கதிக்கு ஆளாகி இத் தோட்டத்தில் செயல் இழந்துள்ள தோட்ட வைத்தியசாலை கட்டடத்தில் அடிப்படை வசதி குறைப்பாடுகளுடன் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அமைதி பேரணியில் ஈடுப்பட்ட மக்கள் இராகலை நகரில் மத்திய தபால் அலுவலகத்திற்கு முன் போராட்டத்தை முன்னெடுத்தனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X