2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

தீர்த்தத் திருவிழா

Editorial   / 2019 ஓகஸ்ட் 30 , மு.ப. 10:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த் 

நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த மகோற்சவத் தீர்த்தத் திருவிழா இன்றைய தினம் காலை நடைபெற்றது. 

காலை 6 மணியளவில் ஆரம்பமான விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து வேல் பெருமான், வள்ளி, தெய்வானை, பிள்ளையார், அம்மன்  சமேதரராய் காலை 07 மணிக்கு கோவில் தீர்த்த கேணியில் தீர்த்தமாடி பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார். 

இன்றைய தீர்த்த திருவிழாவுக்கு நாட்டின் பல பாகங்களில் இருந்தும் , வெளிநாடுகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான அடியவர்கள் கலந்துகொண்டிருந்தனர். 

அதேவேளை ஆயிரக்கணக்கான அடியவர்கள் அங்க பிரதட்சணம் செய்தும், நூற்றுக்கணக்கானவர்கள் காவடிகள் எடுத்தும் கற்பூர சட்டிகள் ஏந்தியும் முருக பெருமானை வழிபட்டனர். 

இதேவேளை இன்றைய தினம் மாலை 6 மணிக்கு கொடியிறக்கம் நடைபெறவுள்ளது. அதனுடன் மகோற்சவ திருவிழாக்கள் நிறைவடையவுள்ளன.

நாளைய தினம் மாலை 5 மணிக்கு திருக்கல்யாணம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .