2025 ஜூன் 01, ஞாயிற்றுக்கிழமை

நடை பவனி

Sudharshini   / 2016 பெப்ரவரி 27 , மு.ப. 05:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.இஸட்.ஷாஜஹான்

சயரோக நோய் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டும் வகையில் நீர்கொழும்பில்  இன்று சனிக்கிழமை (27) நடைபவனியொன்று ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.

இலங்கை தேசிய சயரோக சங்கத்தின் ஏற்பாட்டில் நீர்கொழும்பு, கடோல்கலே சரத்சந்திர குணரத்ன விளையாட்டரங்கில் ஆரம்பமான  இந்த நடைபவனி, சாந்த ஜோசப் வீதி, கொழும்பு- சிலாபம் பிரதான வீதி, நீர்கொழும்பு பிரதான வீதி வழியாக நீர்கொழும்பு  ஆவேமரியா கல்லூரியை வந்தடைந்தது. அங்கு விசேட மருத்துவ சிகிச்சை முகாம் ஒன்றும் இடம்பெற்றது. 

இந்நிகழ்வில் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே, சுகாதார சேவைப் பணிப்பாளர் பாலித்த மஹிபால,  இலங்கை தேசிய சயரோக சங்கத்தின் செயலாளர் வைத்தியர் தர்சன சிறிசேன, பாடசாலை மாணவர்கள் உட்பட மூவாயிரத்துக்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X