2024 மே 08, புதன்கிழமை

நீர் வணக்கத்துடன் வரவேற்பு...

Freelancer   / 2023 ஒக்டோபர் 25 , பி.ப. 12:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

2023 இல் உலகில் குளிர்காலம் ஆரம்பமாகவுள்ள நிலையில், செக் குடியரசில் இருந்து 252 சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக்கொண்டு விசேட விமானம் (சார்ட்டர் ஃப்ளைட்) கட்டுநாயக்க விமான நிலையத்தை புதன்கிழமை (25) வந்தடைந்தது.

இதற்காக Polish Lot Airline (L.O.T.) விமானமே காலை 06.55 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.

அங்கு விமானம் நீர் வணக்கத்துடன் வரவேற்கப்பட்டதுடன், இந்த விமானத்தில் பயணித்த பயணிகளுக்கு இலங்கை சுற்றுலா மேம்பாட்டு பணியகம், ஏர்போர்ட்ஸ் மற்றும் ஏர்லைன்ஸ் லிமிடெட் மற்றும் இலங்கை பயண முகவர் நிறுவனங்களால்  பரிசுகள் வழங்கப்பட்டன

இந்த சிறப்பு விமானங்கள் அந் நாட்டின் குளிர்காலம் முடியும் வரை அதாவது 2024 மார்ச் 26 வரை செக் குடியரசில் இருந்து சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X