2026 மே 01, வெள்ளிக்கிழமை

’பசுமை அமைதி விருதுகள்’

Editorial   / 2026 ஏப்ரல் 28 , பி.ப. 06:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ்த்தேசிய பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில், 'பசுமை அமைதி விருதுகள் – 2025' பரிசளிப்பு விழா யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கைலாசபதி கலையரங்கில் ஞாயிற்றுக்கிழமை (26)  தமிழ்த்தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் தலைமையில் நடைபெற்றது.

 தமிழ்த்தேசிய பசுமை இயக்கமானது, மாணவர்களிடையே சூழல் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ஆண்டுதோறும் 'சூழல் பொது அறிவுப் பரீட்சை' நடாத்தி பசுமை விருதுகளை வழங்கி வருகின்றது.

அந்த வகையில், இப்பரீட்சையில் மாணவர்கள் பெற்ற புள்ளிகளின் அடிப்படையில் இலங்கையின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் 250 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டனர். இவ்வாறு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு பசுமை அமைதி சான்றிதழ்களும் சிறப்புப் பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

பூ. லின்ரன்

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .