Editorial / 2020 ஜூலை 15 , மு.ப. 11:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செந்தூரன் பிரதீபன், என்.ராஜ்
கொரோனா காலப்பகுதியில் இந்தியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட ஒரு தொகுதி பீடி இலைகள், எரியூட்டி அழிக்கப்பட்டன.
யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைய யாழ்ப்பாணம் மதுவரி திணைக்கள அதிகாரிகளினால் இன்றைய தினம் (15) இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு இடம்பெற்று வந்த நிலையில் குறித்த சான்றுகளை எரியூட்டி அழிப்பதற்கு நீதவான் கட்டளையிட்டிருந்தார்.
மதுவரித் திணைக்கள அதிகாரிகள் முன்னிலையில் யாழ்ப்பானம் ஹோம்பையன் இந்து மயானத்தில் வைத்து இவை எரியூட்டி அளிக்கப்பட்டன.


அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .