2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது…

Editorial   / 2023 நவம்பர் 22 , பி.ப. 12:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேராதனையிலிருந்து கட்டுகஸ்தோட்டை வரையான பிரதான வீதியாகக் கருதப்படும் குஹாகொட வீதி, மகாவலி ஆற்றின் குறுக்கே பெரிய மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளதால் போக்குவரத்து முற்றாகத் தடைப்பட்டுள்ளதாக கட்டுகஸ்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.

புதன்கிழமை (22) அதிகாலை 4.30 மணியளவில் குறித்த வீதி தடை செய்யப்பட்டிருந்த நிலையில், பொலிஸார் மிகுந்த முயற்சியுடன் இயந்திரத்தை கண்டுபிடித்து காலை 9.00 மணியளவில் வீதியின் ஒரு பகுதியை திறக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இவ்வாறான இயற்கை அனர்த்தங்கள் ஏற்படும் போது உரிய அதிகாரிகளுடன் தொடர்பு கொள்வதற்கு முறையான முறைமை இல்லாத காரணத்தினால் வீதியின் ஒரு பகுதியைக் கூட திறப்பதற்கு பொலிஸார் பெரும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

ஷேன் செனவிரத்ன

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X