2025 ஜூலை 25, வெள்ளிக்கிழமை

முறாவோடையில் பதற்றம்…

Editorial   / 2017 ஓகஸ்ட் 15 , பி.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

வாழைச்சேனை, முறாவோடை சக்தி வித்தியாலயத்தில், மிக நீண்டகாலப் பிரச்சினையாக இருந்த வந்த மைதானக் காணியை மீட்பதற்கு, மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிடியே சுமணரத்னதேரர் தலைமையில், இன்று (15) பகல் அப்பகுதிக்கு வந்த பொதுமக்கள், காணி வேலியைப் பிடுங்க முற்படமையை அடுத்து அங்கு பெரும் பதற்ற நிலையேற்பட்டது.

இதன்போது, அப்பகுதிக்கு வந்த பொதுமக்களைப் பொலிஸார் தடுத்து நிறுத்தினர்.

அதனையும் பொறுப்படுத்தாக பொதுமக்கள் வேலியை தகர்க்க முற்படும் போது, பொலிஸ் பாதுகாப்பு படையினரால், அம்பிடியே சுமணரத்னதேரர் மற்றும் பொதுமக்கள் தாக்கப்பட்டனர்.

தாக்குதலுக்கு இலக்கான பொதுமக்கள் ஆவேசகம் கொண்டு வேலியை பிடுங்கிய போது, பொலிஸார், குண்டாந்தடிப் பிரயோகம் மேற்கொண்டதில், பெண்கள் உட்பட பலர் காயமடைந்துள்ளனர்.

(படங்கள்: எம்.எம்.அஹமட் அனாம், ஆர்.ஜெயஸ்ரீராம்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X