2025 மே 31, சனிக்கிழமை

விபத்து; நால்வர் காயம்

Kogilavani   / 2016 மார்ச் 24 , மு.ப. 03:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமசந்திரன், ரஞ்சித் ராஜபக்ஷ

தலவாக்கலை, சென்கிளயர் திருச்சபை பகுதியில்;, இன்று (24) காலை இடம்பெற்ற விபத்தில் நால்வர் படுகாயமடைந்த நிலையில் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பில் இருந்து நுவரெலியா நோக்கி  பயணித்த காரும்  பாமஸ்டன் - லிந்துலை நோக்கி சென்ற முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில்  முச்சக்கர வண்டியில் பயணித்த நால்வரில் மூவரும்  காரின் சாரதியும் படுகாயமடைந்த நிலையில் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .