Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Editorial / 2018 ஜனவரி 15 , பி.ப. 02:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
2018ஆம் ஆண்டுக்கான 1ஆம் தர மாணவர் அனுமதியும் வரவேற்பு விழாவும், கிழக்கு மாகாணப் பாடசாலைகளில் இன்று (15) நடைபெற்றன.
புதிய மாணவர்கள், மாலை அணிவித்து இனிப்பு வழங்கி இதன்போது வரவேற்கப்பட்டனர்.
திருகோணமலை: ஒலுமுதீன் கியாஸ்
திருகோணமாலை, கிண்ணியா முஸ்லிம் மகளிர் மகா வித்தியாலயத்தில், அதிபர் என்.எஸ். அமீன் வாரி தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில் வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.இஸட். எம். நளீம், நகரசபை செயலாளர் என்.எம். நெளபீஸ் உள்ளிட்டோர் அதிதிகளாகக் கலந்துகொண்டனர்.
மட்டக்களப்பு: எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பு, காத்தான்குடி மீராபாலிகா வித்தியாலயத்தில், அதிபர் எம்.ஐ.எம்.ஏ.சத்தார் தலைமையில் நடைபெற்ற வைபவத்தில் மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.ஐ.இஸ்ஸதீன், காத்தான்குடி கோட்டக் கல்வி அதிகாரி எம்.ஏ.சி.எம்.பதுர்தீன், ஆரம்பக்கல்வி பிரிவு உதவிக் கல்விப் பணிப்பாளர் ஐ.எம்.இப்றாகீம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அம்பாறை: எஸ்.கார்த்திகேசு
அம்பாறை, திருக்கோவில் குமர வித்தியாலயத்தில், அதிபர் இ.இரத்தினகுமார் தலைமையில் இடம்பெற்ற வரவேற்பு நிகழ்வில் வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி என்.பிள்ளநாயகம் கலந்துகொண்டார்.
முள்ளிப்பொத்தானை - எம் எஸ் அப்துல் ஹலீம்
தம்பலகாமம் பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட முள்ளிப்பொத்தானை தி/கிண்/பாத்திமா பாலிகா வித்தியாலய நிகழ்வு, அதிபர் ஏ.ஆர்.எம் சாதீகீன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கிண்ணியா வலயகல்வி அலுவலகத்தில் கடமை புரியும் ஆசிரியர் ஆலோசகரும் பாத்திமா பாலிகா வித்தியாலத்தின் இணைப்பாளருமான எம்.ஐ.எம் நஸார் பிரதம அதிதீயாக கலந்து கொண்டார்.
கிண்ணியா - ஏ.எம்.ஏ.பரீத்
கிண்ணியா குறிஞ்சாக்கேணி அறபா மகா வித்தியாலயத்தில் பாடசாலை அதிபர் ஆர்.நஸீம் தலைமையில் நடைபெற்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
2 hours ago