2024 மே 06, திங்கட்கிழமை

வவுனியா அல்-அக்க்ஷா மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

Mayu   / 2023 டிசெம்பர் 18 , பி.ப. 12:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

க. அகரன்

வவுனியா சாளம்பைக்குளம் அல்-அக்க்ஷா மாணவர்கள் மற்றும் பெற்றோர் இணைந்து பாடசாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றினை  இன்றைய தினம் (18) முன்னெடுத்திருந்தனர். 

ஜனாதிபதியின் நிதி ஒதுக்கீட்டில் நான்கு வருடங்களிற்கு முன் அடிக்கல் நாட்டப்பட்ட பாடசாலை கட்டிடத்திற்குரிய நிதி திரும்பி அனுப்பி வைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே குறித்த ஆர்ப்பாட்டமானது முன்னெடுக்கப்பட்டிருந்தது. 

குறித்த ஆர்ப்பாட்டத்தில் பாடசாலை மாணவர்கள் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இது தொடர்பில் வன்னி பாராளுமன்ற உறுப்பினரும் ராஜாங்க அமைச்சருமான கே கே மஸ்தானிடம் கேட்டபோது, 

எனது பிரதேசத்துக்கு வரும் எந்த அபிவிருத்தி திட்டங்களையும் நிறுத்தும் செயற்பாட்டை நான் மேற்கொள்ள மாட்டேன். இது சில அரசியல் காரணங்களுக்காக ஒரு அரசியல்வாதி இவ்வாறான செயற்பாட்டில் ஈடுபட்டு இருக்கின்றார். 

எம்மைப் பொறுத்தவரையில் எமது மதத்தின் பிரகாரம் அழிவு சத்தியம் என்கின்ற ஒரு விடயம் இருக்கின்றது. இதற்கு ரிசார்ட்  வர தயாராக இருக்கிறாரா என நான் கேட்க விரும்புகின்றேன். 

குறிப்பாக இந்த வேலை திட்டம் இடை நடுவில் கைவிடப்பட்டிருந்தமை எனக்கு தெரியும். ஆகவே இந்த திட்டத்தினை மேற்கொள்ள வேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடு இருக்கின்றது. அதேவேளை தமிழ், சிங்கள பாடசாலைகளிலும் இவ்வாறான ஒரு நிலைமை இருக்கின்றது. அதனையும் செயல்படுத்த வேண்டும் என்று நான் கோரிக்கை விடுத்திருந்தேன்.

ஜனாதிபதியை சந்திப்பதற்காக சென்றிருந்தபோது அங்கு செயலாளர்தான் இருந்தார். அவரிடம் இந்தப் பாடசாலைகளை அமைக்கின்ற இந்த திட்டத்தின் போது ஏனேய தமிழ் மற்றும் சிங்கள பாடசாலைகளையும் உள்வாங்குமாறு ஒரு கோரிக்கையை வைத்திருந்தேன். 

ஆனால் இந்த திட்டத்தினை நிறுத்துமாறு வியாலேந்திரனையோ அல்லது முசரப் எம் பியையோ அழைத்துச் செல்லவும் இல்லை அவ்வாறான ஒரு சந்திப்பு இடம் பெறவும் இல்லை. 

இது முற்றிலும் பொய்யான ஒரு தகவல். 

ஆகவே இந்த அழிவு சத்தியத்தை செய்வதற்கு அவரை நான் அழைத்து நிற்கிறேன் என அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X