2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

Freelancer   / 2023 மே 11 , பி.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

க. அகரன்

வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வர் ஆலயத்தின் பூசாரி மற்றும் நிர்வாக உறுப்பினர்களின் கைதை கண்டித்து யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா வைத்தியசாலை சுற்றுவட்டத்தில் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. 

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தமிழர்களின் தொன்மையை அழிக்காதே, வெடுக்குநாறி எங்கள் சொத்து,தொல்லியல் திணைக்களம் அரசின் கைக்கூலி, போன்ற வாசகங்கள் தாங்கிய பதாதைகளை ஏந்தியிருந்ததுடன் கோசங்களையும் எழுப்பியிருந்தனர். 

குறித்த ஆர்ப்பாட்டத்தில் வவுனியா மாவட்ட வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .