Freelancer / 2023 மே 16 , மு.ப. 09:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
நூருல் ஹுதா உமர்
கல்முனை சுகாதார பிராந்தியத்திற்கு உட்பட்ட உள்ளூராட்சி மன்றங்களின் ஆணையாளர்கள் மற்றும் செயலாளர்௧ளுடனான கலந்துரையாடல் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில் கல்முனை பிராந்திய சுற்றுச்சூழல் மற்றும் தொழில்வாண்மை சுகாதாரப் பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் ஏ.எஸ்.எம். பௌசாதினால் இணைப்புச் செய்யப்பட்டு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம். றிபாஸ் தலைமையில்நடைபெற்றது.
இந்த கலந்துரையாடலில் டெங்கு கட்டுப்பாடு மற்றும் உணவகங்களில் சுத்தமான சுகாதாரமான உணவினை வழங்குவதை உறுதிப்படுத்துதல் மற்றும் மீன் விற்பனையில் மண் கலப்படம் விலங்கறுமனைகளின் தரம் மற்றும் உணவகங்களை மேற்பார்வை செய்வது தொடர்பான சுகாதார நிறுவனங்களின் உப விதிகள் உள்ளூராட்சி மன்றங்களின் உப விதிகள் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.




2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago