Shanmugan Murugavel / 2016 பெப்ரவரி 24 , மு.ப. 05:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
நியூசிலாந்து அணியின் தலைவர் பிரென்டன் மக்கலம், அவுஸ்திரேலிய அணிக்கெதிராக இன்று நிறைவடைந்த 2ஆவது டெஸ்ட் போட்டியுடன், சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்றார்.
தனது 14 வருட கிரிக்கெட் வாழ்வில், தனக்கு ஆதரவு வழங்கிய கிரிக்கெட் இரசிகர்கள், நியூசிலாந்து கிரிக்கெட் சபை, நியூசிலாந்து கிரிக்கெட் அணி, தனது குடும்பம் ஆகியோருக்கு நன்றி தெரிவித்த அவர், தற்போதுள்ள நியூசிலாந்து அணி மீது நம்பிக்கை வைக்கலாம் எனத் தெரிவித்த அவர், இவ்வணி, சிறப்பான வீரர்களைக் கொண்டுள்ளதாகத் தெரிவித்தார். நியூசிலாந்து அணியில், மகிழ்ச்சியையும் சிறப்பான கலாசாரத்தையும் சிறப்பாகக் கொண்டுள்ளதாகத் தெரிவித்த அவர், அணியிலுள்ள அனைவரும், மிகவும் ஆசுவாசமாக உள்ளதாகவும் தெரிவித்தார்.
தனது இறுதி டெஸ்ட் போட்டியில், 54 பந்துகளில் சதத்தைப் பெற்ற பிரென்டன் மக்கலம், வேகமான டெஸ்ட் சதம் என்ற சாதனையையும் படைத்தே விடைபெறுகிறார். நியூசிலாந்து அணியைச் சிறப்பாகவும் ஆக்ரோஷமிக்க அணியாகவும் வழிநடத்திய மக்கலம், உலகிலுள்ள மிகச்சிறந்த தலைவர்களுள் ஒருவராகக் கருதப்படுகிறார்.
101 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய பிரென்டன் மக்கலம், முச்சதம் ஒன்று உள்ளடங்கலாக 12 சதங்கள், 31 அரைச்சதங்கள் உள்ளடங்கலாக, 6,453 ஓட்டங்களை 38.64 என்ற சராசரியில் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago