
ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டிக்கு கொல்கொத்தா நைட் ரைடேர்ஸ் அணி தெரிவாகியுள்ள அதேவேளை மூன்றாவது தெரிவுப் போட்டிக்கு சென்னை சுப்பர் கிங்கஸ் அணி தெரிவாகியுள்ளது.
கொல்கொத்தா நைட் ரைடேர்ஸ் அணிக்கும் கிங்க்ஸ் 11 பஞ்சாப் அணிக்குமிடையில் நடைபெற்ற போட்டியில் 28 ஓட்டங்களினால் கொல்கொத்த நைட் ரைடேர்ஸ் அணி வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் முதலில் துடுப்பாடிய கொல்கொத்த நைட் ரைடேர்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 163 ஓட்டங்களைப் பெற்றது. இதில் ரொபின் ஊத்தப்பா 42 ஓட்டங்களையும், மானிஷ் பாண்டி 21 ஓட்டங்களையும், யூசுப் பதான், சூரியகுமார் யாதவ் ஆகியோர் தலா 20 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் கன்வீர் சிங் 3 விக்கெட்களையும், மிச்சல் ஜோன்சன், ரிஷி தவான் ஆகியோர் தலா 2 விக்கெட்களைக் கைப்பற்றினர். பதிலுக்கு துடுப்பாடிய கிங்ஸ் 11 பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 135 ஓட்டங்களைப் பெற்றது. இதில் ரிதிமன் சஹா 36 ஓட்டங்களையும், மனன் வொஹ்ரா, ஜோர்ஜ் பெய்லி ஆகியோர் தலா 26 ஓட்டங்களைப் பெற்றனர். போட்டியின் நாயகனாக உமேஷ் யாதவ் தெரிவானார்.
இந்த வெற்றியின் மூலம் கொல்கொத்தா நைட் ரைடேர்ஸ் அணி இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளது. கிங்ஸ் 11 பஞ்சாப் அணி சென்னை சுபப்ர் கிங்ஸ் அணிகளுக்கிடையில் நடைபெறும் மூன்றாவது தெரிவுப் போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்குத் தெரிவாகும்.
மும்பை இந்தியன்ஸ், சென்னை சுப்பர் கிங்ஸ் அணிகளுக்கிடையில் நடைபெற்ற போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட்களினால் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் முதலில் துடுபாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 173 ஓட்டங்களைப் பெற்றது. இதில் லென்டி சிமொன்ஸ் 67 ஓட்டங்களையும், மைக்கல் ஹசி 39 ஓட்டங்களையும், கூரே அன்டர்சன், ரோஹித் ஷர்மா ஆகியோர் தலா 20 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் மோஹித் ஷர்மா 3 விக்கெட்களையும், ஆஷிஸ் நேஹ்ரா, ரவீந்தர் ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். பதிலுக்கு துடுப்பாடிய சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 18.4 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 176 ஓட்டங்களைப் பெற்றது. இதில் சுரேஷ் ரெய்னா ஆட்டமிழக்காமல் 54 ஓட்டங்களையும் டேவிட் ஹசி ஆட்டமிழக்காமல் 40 ஓட்டங்களையும், பப் டு பிலேசிஸ் 35 ஓட்டங்களையும், டுவைன் ஸ்மித் 24 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ஹர்பஜன் சிங் 2 விக்கெட்களைக் கைப்பற்றினர். போட்டியின் நாயகனாக சுரேஷ் ரெய்னா தெரிவானார்.