A.P.Mathan / 2014 ஜூலை 24 , பி.ப. 12:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை, தென் ஆபிரிக்கா அணிகளுக்கிடையில் இன்று ஆரம்பமாகியுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் நாள் நேர முடிவில் இலங்கை அணி 86 ஓவர்களை எதிர்கொண்டு 5 விக்கெட்கள் இழப்பிற்கு 305 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. இதில் மஹேல ஜெயவர்தன ஆட்டமிழக்காமல் 144 ஓட்டங்களையும், அஞ்சலோ மத்தியூஸ் 63 ஓட்டங்களையும் கௌஷால் சில்வா 44 ஓட்டங்களையும் பெற்றனர். மஹேல ஜெயவர்த்தனவின் 34ஆவது சதம் இதுவாகும். கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் இவர் பெற்றுள்ள 11ஆவது சதம் இதுவாகும். தென் ஆபிரிக்கா அணியின் பந்துவீச்சில் டேல் ஸ்டைன், JP டுமினி ஆகியோர் தலா 2 விக்கெட்களைக் கைப்பற்றியுள்ளனர். அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .