2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

காஷி, உட்டைஷா பந்து வீச தடை

A.P.Mathan   / 2014 ஒக்டோபர் 09 , மு.ப. 02:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

பந்தை வீசி எறிகின்றனர் என குற்றம் சாட்டப்பட்டு இருந்த பங்களாதேஷ் அணியின் சொஹாக் காஷி, சிம்பாவே கிரிக்கெட் அணியின் வீரர் ப்ரோஸ்பர் உட்டைஷா ஆகியோர் சர்வதேசக் கிரிக்கெட் பேரவையினால் பந்து வீச தடைசெய்யப்பட்டுள்ளனர். இரண்டு வீரர்களும் இங்கிலாந்தில் உள்ள கார்டிப் பல்கலைக்கழகத்தில் உயிரியல் இயந்திர தொழில் நுட்ப பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இதன்படி இருவரினது பந்துவீச்சுகளும் விதிமுறைகளை தாண்டி உள்ளன என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இருவரும் கிரிக்கெட் போட்டிகளில் பந்துவீச முடியாது என சர்வதேசக் கிரிக்கெட் சபை தடைசெய்துள்ளது. 
 
மேற்கிந்திய தீவுகள் அணியுடனான கிரிக்கெட் போட்டியின் போது சொஹாக் காஸி விதிமுறைகளை தாண்டி பந்து வீசுகின்றார் என நடுவர்களால் குற்றம் சுமத்தப்பட்டது. காஸி முக்கியமான வீரர் . அவரின் பந்துவீச்சு மாற்றத்தில் பங்களாதேஷ் கிரிக்கெட் சபை உறுதுணையாக உள்ளது. இன்னும் சில வாரங்களில் அவர் மீண்டும் பந்து வீசக் கூடிய நிலை உருவாகும் என பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி நஷ்முல்லா சௌத்திரி தெரிவித்துள்ளார். 
 
தென் ஆபிரிக்கா அணியுடனான போட்டியின் போது ப்ரோஸ்பர் உட்டைஷா விதிமுறைகளை தாண்டி பந்து வீசுகின்றார் என நடுவர்களால் குற்றம் சுமத்தப்பட்டது. உட்டைஷா தொழில் நுட்பக்குழுவுடன் இணைந்து தனது பந்துவீச்சு மாற்றங்களுக்கு செயற்படவுள்ளார். மிக விரைவில் அவர் மாற்றங்களை செய்து மீண்டும் விளையாட தயாராகி விடுவார் என சிம்பாவே கிரிக்கெட் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இருவரும் தமது பந்து வீச்சு மாற்றங்களை செய்து, மீண்டும் உயிரியல் இயந்திர தொழில் நுட்ப பரிசோதனை மூலம் தமது பந்துவீச்சு விதிமுறைகளுக்கு உட்பட்டு இருக்கின்றமையை நிரூபித்தால் சர்வதேசக் கிரிக்கெட் பேரவை மீண்டும் பந்து வீச அனுமதி வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .