2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

மொஹமட் ஹபிஸின் பந்துவீச்சில் சந்தேகம்

A.P.Mathan   / 2014 நவம்பர் 13 , பி.ப. 07:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தான் அணியின் சகலதுறை வீரர் மொஹமட் ஹபீஸ் விதிமுறைகளை மீறி பந்துவீசுவதாக சந்தேகிப்பதாக சர்வதேசக் கிரிக்கெட் பேரவையிடம் முறையீடு செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தான் வெற்றி பெற்றுள்ள நியூசிலாந்து அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் நடுவர்களாக கடமையாற்றிய நடுவர்கள், குறித்த முறையீட்டை செய்துள்ளனர். அண்மையில் இந்தியாவில் நடைபெற்ற சம்பியன் லீக் தொடரின் போதும் குறித்த முறையீடு செய்யப்பட்டு இருந்தது. 
 
அண்மையில் தடைசெய்யப்பட்ட பந்துவீச்சாளர்கள் அனைவருமே ஓப் ஸ்பின் வீசும் பந்துவீச்சாளர்கள். அந்த பட்டியலில் மொஹமட் ஹபீஸ் இணைந்து கொள்வாரா இல்லையா என்பது 21 நாட்களுக்குள் அவர் செய்யவிருக்கும் உயிரியல் எந்திர தொழில் நுட்ப பரிசோதனை மூலமே தெரியவரும். இந்த வருடத்தில் இவ்வாறு சந்தேகம் எழுப்பப்பட்ட இரண்டாவது பாகிஸ்தான் பந்துவீச்சாளர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. சைட் அஜ்மல் ஏற்கெனவே தடை செய்யப்பட்டுள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .