Editorial / 2017 நவம்பர் 30 , பி.ப. 09:36 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான கோப்பா டெல் ரே தொடரின் இறுதி 16 அணிகளுக்கான சுற்றுகளுக்கு, பார்சிலோனா, அத்லெட்டிகோ மட்ரிட் ஆகிய அணிகள் தகுதிபெற்றுள்ளன.
றியல் முர்சியா அணியுடனான இறுதி 32 அணிகளுக்கான சுற்றுப் போட்டியின் முதலாவது சுற்றுப் போட்டியில் 3-0 என்ற கோல் கணக்கில் வென்ற பார்சிலோனா, நேற்று இடம்பெற்ற இரண்டாவது சுற்றுப் போட்டியில் 5-0 என்ற கோல் கணக்கில் வென்று, 8-0 என்ற மொத்த கோல் எண்ணிக்கை அடிப்படையில் இறுதி 16 அணிகளுக்கான சுற்றுக்குத் தகுதிபெற்றது.
எல்சே அணியுடனான இறுதி 32 அணிகளுக்கான அத்லெட்டிகோ மட்ரிட்டின் முதலாவது சுற்றுப் போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்திருந்த நிலையில், நேற்று இடம்பெற்ற இரண்டாவது சுற்றுப் போட்டியில் 3-0 என்ற கோல் கணக்கில் வென்று, 4-1 என்ற மொத்த கோல் கணக்கில் இறுதி 16 அணிகளுக்கான சுற்றுக்கு அத்லெட்டிகோ மட்ரிட் தகுதிபெற்றது.
14 minute ago
23 minute ago
29 minute ago
40 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
23 minute ago
29 minute ago
40 minute ago