Shanmugan Murugavel / 2026 ஜனவரி 28 , பி.ப. 02:16 - 0 - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரிலிருந்து உலகின் இரண்டாம் நிலை வீராங்கனையான இகா ஸ்வியாடெக், நான்காம் நிலை வீராங்கனையான அமன்டா அனிசிமோவா ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இன்று நடைபெற்ற தனது காலிறுதிப் போட்டியில் ஐந்தாம் நிலை வீராங்கனையான எலெனா றைபகினாவை எதிர்கொண்ட போலந்தின் ஸ்வியாடென், 5-7, 1-6 என்ற நேர் செட்களில் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறினார்.
இதேவேளை தனது காலிறுதிப் போட்டியில் ஆறாம் நிலை வீராங்கனையான ஜெஸிக்கா பெகுலாவை எதிர்கொண்ட ஐக்கிய அமெரிக்காவின் அனிசிமோவா, 2-6, 6-7 (1-7) என்ற நேர் செட்களில் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறினார்.
இதுதவிர தனது காலிறுதிப் போட்டியில் ஐந்தாம் நிலை வீரரான லொரென்ஸோ முஸெட்டியை எதிர்கொண்ட நான்காம் நிலை வீரரான நொவக் ஜோக்கோவிச் 4-6, 3-6, 3-1 என்ற ரீதியில் பின்தங்கியிருந்தபோதும், இத்தாலியின் முஸெட்டி காயம் காரணமாக போட்டியிலிருந்து விலகியிருந்த நிலையில் அரையிறுதிப் போட்டிக்கு ஜோக்கோவிச் முன்னேறினார்.
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago